states

img

500 கிலோ கஞ்சாவை எலிகள் திண்றுவிட்டதாம் - உ.பி போலீஸ் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச பிரதேச மாநிலத்தின் மதுராவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ கஞ்சாவில் 500 கிலோவுக்கு மேல் எலிகள் திண்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பிடிபட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து, மதுரா போலீசார் கஞ்சாவின் மாதிரிகளை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனை ஏற்காத நீதிமன்றம், ஒட்டுமொத்த கஞ்சாவையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியது. அப்போது, காவல் நிலைய ஸ்டோர் ரூமில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் 500 கிலோவுக்கு அதிகமான கஞ்சாவை தின்றுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பதிலை கேட்ட நீதிமன்றம் அதிர்ச்சிக்குள்ளானது.